இயற்றமிழ் இயல்பாய் உளம்பெற்ற எங்கள் தமிழ்த்திருநாடு!
இசைத்தமிழ் இனிதாய் வளம்பெற்ற எங்கள் தமிழ்த்திருநாடு!
நாடகத்தமிழ் நாளும் நலம்பெற்ற எங்கள் தமிழ்த்திருநாடு!
இலக்கணமும் இலக்கியமும் கைக்கோர்த்து
கரம் கூப்பிய எங்கள் தமிழ்த்திருநாடு!!
விண்ணைப் பிளக்கும் வீரத்திலே
எங்கள் பெண்ணும் சளைத்தவளில்லை!
அள்ளிக் கொடுக்கும் கொடையினாலே
எங்கள் அன்பும் குறைந்ததில்லை!
வைகையும் காவிரியும்
பரணியும் சிருவாணியும்
வலம் வரும் வரம் பெற்றது
எங்கள் தனித்திருநாடு!
சங்கம் முழங்கிய காலத்திலே
பல சிங்கங்கள் ஆண்ட வீரத்திருநாடு!
முடியாட்சி முதல்
குடியாட்சி வரை
அறத்தை அரவணைக்கும்
அருட்திரு தமிழ்நாடு!
இந்நாட்டின் வளங்காப்பது
நம் கடமை அல்ல,
நம் உணர்வுகளின் உரிமை.
வாழ்ந்து காப்போம்!
வாழ காப்போம்!!
-மழைக்கனல்
-மழைக்கனல்


0 comments:
Post a Comment