Friday, December 23, 2011

எவளோ எவளோ ..

எவளோ எவளோ..
கண்கள் மட்டும் அது எனதோ,
கண்ணுக்குள்ளே அது அவளோ!

எவளோ எவளோ..
நெஞ்சம் மட்டும் அது எனதோ,
உள்ளே துடிப்பது அவளோ!

கால்கள் ஓடுது,
காற்றினில் மனம் பாவை தேடுது,
ஏனோ.. காதலில் விழுந்தேனோ!

கைகள் ஆடுது,
தண்ணீரில் தகதிமி போடுது,
ஏனோ.. காதலில் விழுந்தேனோ!

இல்லாத தேசம் ஒன்றை எனக்குள் கண்டேன்,
காதல் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டேன்.
அவளை நினைத்தே பூக்களில் முட்டிக் கொண்டேன்,
என்னைக் கசக்கிய பூக்களைத் திட்டிக் கொண்டேன்.

ரகசியமாய் மொட்டுக்குள் 
அவளுக்கொரு இடத்தைக் கண்டேன்,
மொட்டு விரிந்து 
அதைக் காட்டிக் கொடுத்ததில் முழுதாய் நொந்தேன்.

எவளோ எவளோ..
இனி கன்னி இல்லை என் மனது,
அள்ளிப் போனது அவள் அழகு.

எவளோ எவளோ..
தூக்கம் தொலைந்தது இரவு,
செத்து மடியுது கனவு.

வாழ்க்கையின் வாசலை 
காதல் அடைத்துக் கொண்டது.
அவளே சாவி, 
எப்போது திறந்து செல்வது.

அவளை நினைத்து நினைத்தே
மூளைக்கும் மூச்சு திணறல் வந்ததோ?
அவளே ஆக்சிஜன்,
அவளை நினைத்தே மீண்டும் மீண்டு வந்ததோ!

எவளோ எவளோ..
கண்கள் மட்டும் அது எனதோ,
கண்ணுக்குள்ளே அது அவளோ!
                                                                              -மழைக்கனல்

0 comments:

Post a Comment