Friday, December 23, 2011

இரயில் பயணம்


இரயில்,
நகரும் வீடுகள்..

சேவகம் மட்டுமே
இதற்கு தெரிந்த மொழி.
சமத்துவம் மட்டுமே
இது அறிந்த வழி.

இரயில் பயணம்,
நான் கொள்ளும் ஆனந்த சயனம்.
தாய் எங்கோ ஓரிடத்தில்
ஆனால்,
தாலாட்டு மட்டும் சுகமாய் இங்கு.

சன்னல்களில் திரைச்சுருளை
ஒட்டியது யார்?
திரைப்படமாய் காட்சிகளின் ஓட்டம்.

ஈசல் உறவுகள் இங்கு ஏராளம்.
அன்றே உறவாடி
அன்றே மறப்போம்.

இந்த பயணத்தில்,
தொடும் காற்றில் உண்டு காதல்.
உலவும் இரவில் உண்டு இதம்.
குலுங்கும் ஓசையில் உண்டு இன்னிசை.

சன்னலின் உள்ளே
நானும் ஒரு கைதியாய்.
வர வேண்டும் இறைவன் இப்போது.
கேட்பேன் சிறகினை வரமாய் அப்போது.

ரயிலுக்கு இணையாய்
ரஞ்சகமாய் பறக்க வேண்டும்.
இந்த இனிமையில் மூழ்கி
இப்படியே இறக்க வேண்டும்.
                                                                   -மழைக்கனல்

2 comments:

mathi said...

azagana payanam than...

Anonymous said...

yes, i agree-Mukilan

Post a Comment