Sunday, January 29, 2012

சாதி முகம்



செம்பியன் வீழ்ந்தாலும்
செம்புயிர் மாண்டாலும்
செம்புண்ணீர் வடிவது ஒன்றே!


சாதி என்னும் சாயப் பூச்சால்
மனிதம் மறந்து போச்சு.
நேற்றைய தேசிய தலைவர்கள்
இன்றைய சாதிய அடையாளங்கள்.


அண்ணன் தம்பி நாம் என
கல்வியில் கண்டவர் கூட
அவன் தலைவன் மாண்டால்
இவன் தம்பி தலை கொய்வான்.

தனிமனிதன் ஆளுமை காட்ட
பலமனிதரை இரையாய் வீசும்
இரத்த சமுத்திரம்.


இருவேறு சாமரத்தின்
காற்றுகள் கலக்கப்பட்டால்
கவலையின்றி காதல் கருவறுக்கப்படும்.
காதலர் தலை நறுக்கப்படும்.

மரபு என்னும் முகமூடி அணிந்து
மனிதன் என்ற நிலை மறந்தனர்.

தேசத்தின் பரப்பில் செம்மண் வகிப்பது
மூன்றில் ஒன்று.
காரணம் கண்டேன் இன்று.

சாதி என்னும் முகத்திரை
கிழியாத வரை
சாக்கடை கூட செந்நீர் நெடி தான்.


பொருள்:
செம்புயிர் - கீழ்நிலை உயிர்கள்
செம்புண்ணீர் - இரத்தம்
சாமரம் - விசிறி




0 comments:

Post a Comment