Thursday, January 26, 2012

மழை



பூமிக்குப் பூப்புனித நீராட்டு விழாவோ?

மழை,
*விண்ணையும் மண்ணையும்
இணைத்திடும் தண்ணீர் வடங்கள்.

*வான் அன்னை, பூமிப்பிள்ளைக்கு
தந்திடும் உயிர்ப்பால்.

*விண்மரம் விழுதாய்
மண்ணுக்கு அனுப்பிய தூது.

*வான மைதானத்தில் ஓடும்
மேக குழந்தைகளின் வியர்வைத்துளிகள்.

*வறண்ட நிலத்தைக் காணும் போதெல்லாம்
வானம் வடிக்கும் கண்ணீர் துளிகள்.

*வான் கடலினின் தவறி விழுந்த
திரவ முத்துக்கள்.

மழை, தூரிகை.
அதைக் கொண்டு
வானம் எழுதிடும்
பூமியில் ஓவியம்.

மழை, அழகு.
ரசித்துப் பார்க்க நேரமில்லை.

மழை, சங்கீதம்.
லயிந்து கேட்க யாருமில்லை.

வாசனை..
மாரிக்கு மண்ணின் வரவேற்போ?

மானுடம் என்ன செய்தோம்,
மாசைத் தவிர..

0 comments:

Post a Comment