என் உணர்வுகளை
உரக்க கத்த வேண்டுமென
எண்ணும் போதெல்லாம்
உன் மௌனம்
அதை உறங்க வைத்தது.
என் அன்பினை
உன் முன்னே
அடுக்கி வைத்த போதெல்லாம்
உன் மௌனம்
அதை அடக்கி வைத்தது.
என் நெஞ்சம்
நிறைந்த போதெல்லாம்
உன் மௌனம்
அதில் நெருப்பைப் பற்ற வைத்தது.
உன் மௌனத்தை ரசிக்கும்
என் நாடகம்,
என்று முடியுமோ?
உன் மௌனத்தின் மொழிகளை
உணர்ந்து கொள்ளும்
மேதை அல்ல நான்.
உன் சொல்லுக்காக காத்திருக்கும்
அறியா பேதை நான்.
உணர்வுகள் உள்ளே அடைக்கப்பட்டால்
உயிருக்குக் கேடாம்.
ஆதலால் அன்பே,
என்றாவது ஒரு நாள்
யாரிடமும் சொல்லாமல்
நான் உறங்கி விட்டால்,
அன்றாவது என் காதருகே
உன் மௌனம் கலைந்து
அழுது விடு!
அப்போதும் உணர்வேன்..


0 comments:
Post a Comment