மூக்கோடு மூக்குரச
மூச்சு முட்ட
நீ கொடுத்த முத்தங்கள்
போதவில்லை எனக்கு.
இறுக்கக் கட்டிக் கொண்டு
இரவில் உன்னோடு
நான் கண்ட சொப்பணங்கள்
போதவில்லை எனக்கு.
பசியில்லை என்ற போதிலும்
ஊட்டி விட நீயிருந்தால்
ஊட்டம் தரும் உணவுகள்
போதவில்லை எனக்கு.
கையொடிந்து காலொடிந்து
மூலையிலே நான் கிடக்க
நீ தீண்டிய நாட்களும்
போதவில்லை எனக்கு.
குழந்தையிடம் பொம்மை சொன்னது..

0 comments:
Post a Comment