காய்ந்த சருகுகள்
காயாத ரணங்கள்.
வாழ்ந்த காலங்கள்
வாழ்விழந்த நிலங்கள்.
காறி உமிழக் கூட
மாரியிடம் ஈரமில்லை.
அன்னை பூமி
அனாதை சாமி ஆனது.
மண்ணை நம்பிய
மனங்கள் எல்லாம்
மலடுகள் ஆனது.
கண்ணைப் பறித்த
வளங்கள் எல்லாம்
காணாமல் போனது.
விவசாயத்தின் சாயம் இன்று
மாறி மருங்கிப் போனது.
பச்சை எல்லாம் வெளுத்து
வெறும் நச்சை மட்டும் உமிழுது.
புத்தம் புது வளர்ச்சிகள் யாவும்
பூமிக்கு நரம்புத் தளர்ச்சியே தந்தது.
ஆடி அடங்கும் பூமிக்கு
இங்கு ஆடை யார் தருவது ?
நெல்லுக்கு நெத்திக்காசு
வைக்கும் முன்னே
விதைகள் கொஞ்சம்
விளைய விழைவோம்!!

0 comments:
Post a Comment